• Sep 20 2024

நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்- விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்த சமந்தா

stella / 2 years ago

Advertisement

Listen News!

இளம் இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் வெற்றியினால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில் சமந்தா இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படத்தை பதிவு செய்து விகே்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் “கதிஜா பாத்திரத்தில் என்னை மகிழ்விக்க அனுமதித்ததற்கு விக்னேஷ் சிவனுக்கு நன்றி.

நகைச்சுவை எனக்கு மிகவும் பிடித்த வகையாகும், மேலும் நான் உண்மையானவராக வேடிக்கையான பெண்ணாக இருக்க அனுமதிக்கும் ஒரு பாத்திரத்தில் நான் நடிக்கும்போது அது எப்போதும் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

நீங்கள் வாக்குறுதியளித்ததை விட அதிகமாக வழங்கியுள்ளீர்கள், நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு வைரலாகி வருகின்றது. அத்தோடு சமந்தா தற்பொழுது ‘யசோதா’ என்னும் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement