• Sep 20 2024

பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க எனது அம்மாவை அழைத்து வருவேன்- ரசிகர்களை குஷிப்படுத்திய விக்ரம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்காண உள்ள பொன்னியின் செல்வன் படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மணிரத்தினத்தின் கனவு படமான இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது. சோழ வம்ச வரலாற்றை மையமாகக் கொண்டுள்ள இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் நிலவி வருகிறது.


இந்த நிலையில் பொன்னியின் செல்வன் தற்போது திரைப்படமாக உருவாகி இருக்கும் நிலையில் இந்த நாவலை சிறுவயதில் படித்த தற்போதைய முதியவர்கள் இந்த படத்தை திரையில் பார்க்க அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இது குறித்து பல டுவிட்டர் பயனாளிகள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் என்னுடைய அம்மா அப்பா இந்த படத்தை பார்க்க ஆசையாக உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளனர். 

இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் விக்ரம் இன்றைய இளைஞர்கள் தங்களுடைய அம்மா அப்பாவை ’பொன்னியின் செல்வன்’ படத்திற்கு அழைத்து வருகிறார்கள் அந்த வகையில் நானும் என் அம்மாவை இந்த படத்தை பார்க்க திரை அரங்கிற்கு அழைத்து வருவேன் என்று கூறியுள்ளார்.


மேலும் இப்படம் முதல் நாளில் மட்டும் 25 கோடிக்கு அதிகமாக வசூல் ஆகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement