• Sep 20 2024

விஜயகாந்தை ஒருமுறை நேரில் பார்த்தால் செத்து விடுவேன்- கபாலி என்னும் அழைக்கப்படும் நடிகர் பொன்னம்பலத்தின் கோரிக்கை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகர் பொன்னம்பலம்.இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இருப்பினும் தற்பொழுது நடிப்பதைத் தவிர்த்து வருகின்றார்.

மேலும் இவர் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இதனால் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறார்.இந்த நிலையில் இவர் தற்பொழுது நலமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

தனக்கு உடல்நிலை சரியில்லாத போது உதவிய சினிமா பிரமுகர்கள் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார் பொன்னம்பலம்.

அந்த பேட்டியில் விஜகாந்த் குறித்து பேசிய நடிகர், விஜயகாந்த் எனக்கு கடவுள் போல அவரை நான் இன்னும் நேராக சென்று பார்க்கவில்லை. அவரை நேரில் பார்த்தால் செத்துவிட்டேன். எனக்கு கொஞ்ச நாளா இதய நோய், சிறுநீரக நோய் இருக்கு அவரைப் பார்த்தால் என் மனசு தாங்காது. ஒருத்தர் மேல பாசம் வச்சுட்டு அதுவும் அளவு கடந்த பாசம் வைத்து விட்டால் அவர் உடல்நிலை மோசமாக இருக்கும் போது பார்க்க முடியாது. அதனால் தான் நான் இதுவரை விஜயகாந்தை நேரில் பார்க்கவில்லை. அவர் இப்போ நல்ல உடல் நலத்தோடு இருந்திருந்தால் அவர்தான் எனக்கு முதல் நபராக உதவி இருப்பார் என கூறியுள்ளார்.

மேலும் நடிகர் விஜயகாந்திற்கு சமீபத்தில் சர்க்கரை அதிகமானதால் அவரது இரண்டு கால் விரல்கள் துண்டிக்கப்பட்டதாக தேமுதிக கட்சி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விஜயகாந்த் தற்போதும் உரிய சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement