• Sep 20 2024

அப்படி அமைந்தால் பண்ணுவேன்- குழந்தை குறித்து குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அனிதா சம்பத்

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன் தொலைக்காட்சியில் பத்திரிகை வாசிப்பவராக இருந்தவர் தான் அனிதா சம்பத். இதனைத் தொடர்ந்து இவர் விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்தே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர்.

இந்த நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பி பி ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சியில் சாரிக் உடன் சேர்ந்து நடனமாடி டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டிச் சென்றார்.


மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது ரசிகர்களிடம் பேசும் போது ஒருவர் எப்போ குட் நியூஸ் சொல்லப் போறீங்க என்று கேட்டார்.அதற்கு பதில் கூறிய அவர் நானே குழந்தை தான் எனக்கு எதுக்கு இப்போ குழந்தை என்று கூறினார்.


அத்தோடு சீரியலில் நடிப்பீர்களா என்றும் இன்னொருவர் கேட்டார். அதற்கு பதில் கூறிய அனிதா நல்ல காரெக்டர் அமைந்தால் கண்டிப்பாக பண்ணுவேன் என கூறியிருக்கிறார் எனபதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement