• Sep 20 2024

நான் மன நோயாளியா.. வீட்டில் புகுந்து தாக்குவேன்.. கோபத்தில் கொந்தளித்த கங்கனா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் 'தாம்தூம்' படத்தில் நாயகியாகவும், 'தலைவி' படத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கங்கனா ரணாவத். அதுமட்டுமல்லாது தற்போது இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையாகவும் இருந்து வருகின்றார்.


பாலிவுட் திரையுலகின் முன்னணி பெண் நட்சத்திரமாகத் திகழ்ந்து வருபவர் இவர் பிரபலங்களின் மீதான சர்ச்சைகளை கிளப்புவதில் ரொம்பவே பேமஸ் ஆனவர். அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் உடைய பிரபலங்கள் பலரின் மீதும் தொடர்ந்து பல குற்றங்களை முன் வைத்து வருகின்றார். அத்தோடு சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகள் வெளியிட்டும் வருகிறார். 


அந்தவகையில் இவர் மராட்டிய அரசுடன் மோதி இருந்தமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இதனால் மும்பையில் உள்ள அவரது அலுவலகம் கூட இடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டு மாடியிலும், கட்டிடத்திலும், பார்க்கிங்கிலும் 'ஜூம் லென்ஸ்' வைத்து தன்னை யாரோ வேவு பார்ப்பதாக புகார் ஒன்றினை தெரிவித்து இருந்தார். 


மேலும் தன்னை வேவு பார்ப்பவர் அவரது மனைவியை பெரிய நடிகையாக்க முயற்சி செய்வதாகவும் கூறி  இருந்தார். இதனால் இவருக்கு மனநோய் என ஒரு சிலர் கிண்டலாக கூறி இருக்கின்றார்கள் போல் தெரிகிறது. இந்த நிலையில் தற்போது கங்கனா இன்னொரு கருத்தினை வெளியிட்டிருக்கின்றார்.


அதாவது 'என்னை பற்றி கவலைப்படுகிறவர்கள் ஒரு விஷயத்தை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். நேற்றிரவு முதல் என்னை சுற்றி சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் எதுவும் இல்லை. யாரும் என்னை பின்தொடரவும் இல்லை. சரியாக இருந்து கொள்ளுங்கள். இல்லையேல் வீட்டுக்குள் புகுந்து உங்களை நான் தாக்குவேன். என்னை மனநோயாளி என்று அழைப்பவர்களுக்கு எதிராக நான் எந்த அளவுக்கு செல்வேன் என்று தெரியவில்லை" என்று மிகவும் கோபமாக பதிவிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவானது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

Advertisement

Advertisement