தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவரை ரசிகர்கள் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர்.
இவர் கடந்த ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். எனினும் சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் அஜீத்தை வைத்து AK67 படம் இயக்க இருந்தார். ஆனால், இப்படத்திலிருந்து அவர் திடீரென்று விலகினார்.
இவ்வாறுஇருக்கையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் மனம் திறந்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.அந்த பேட்டியில் அவர் பேசுகையில், இயக்குநர் நெல்சன் என்னுடைய சின்ன வயதிலிருந்து நண்பன். இயக்குநர் லோகேஷை இப்போதான் மாநகரம் படத்திலிருந்து தெரியும்.
நெல்சனும், நானும் ஒரே பள்ளியில் படித்தோம். மைலாப்பூரில் உள்ள சாந்தோம் பள்ளியில்தான் படித்தோம். பட்டினப்பாக்கத்தில் கிரிக்கெட் விளையாடுவோம். நெல்சனும், நானும் குடும்ப நண்பர்கள் மாதிரிதான்.
ஒருமுறை நான் நானும் ரவுடி தான் படத்தில் படப்பிடிப்பு செய்து கொண்டிருந்தேன்.அத்தோடு அதில் நயன்தாரா அழுதுபோல் ஒரு காட்சி. அவங்க ரோட்டில் அழுதுகொண்டே வராங்க. அப்போது ஒருவர் ஓடிவந்து ஏ... நயன்தாரா டா... நயன்தாரா டா... என்று சொன்னாரு.
நயன்தாரா அழுதுக்கொண்டே வரும்போது அவங்க கூடவே வராரு. ஆனால் நயன்தாரா நான் கட் என்று சொல்ற வரைக்கும் அவங்க நடித்துக் கொண்டே இருந்தாங்க. உடன் வந்தவர் நயன்தாரா அழுவதைப் பார்த்து என்ன ஆச்சு மேடம் என்று கேட்டுக்கொண்டே வராரு.
3 முறை படப்பிடிப்பு செய்யும்போது ரொம்ப கூட்டம் சேர்ந்து விட்டது.அத்தோடு எங்களால முடியாது. மறுநாள் நயன்தாராவை எங்கையாவது நடுரோட்டில் இறக்கி விட்டுவிடுவோம்.அவங்களும் அழுதுகொண்டே வந்து வேலையை முடித்து கொடுப்பாங்க. ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். பிறகு ஒருவேளையாக யாரும் இடைஞ்சல் செய்யாத இடத்தில் இந்த காட்சி முடிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
Listen News!