• Sep 20 2024

'லிப் லாக் மற்றும் உடலுறவு காட்சிகளில் நடிக்கவே மாட்டேன்'.. மனம் திறந்த பிரியாமணி..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

2003ம் ஆண்டு தெலுங்கில் வெளியான எவரே அட்டகாடு படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் பிரியாமணி. அடுத்த ஆண்டு தமிழில் வெளியான கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான பிரியமாணி தேர்வு செய்து நடித்த படங்கள் பல தரமான படங்களாக அமைந்தன.


பிரியாமணியின் நடிப்பை பருத்திவீரன் படத்தில் பார்த்த ரசிகர்கள் மிரண்டே போய் விட்டனர். கிளைமேக்ஸ் காட்சியில் பிரியாமணியை கெடுக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், பிரியாமணி ஆபாசமாக நடிக்கவில்லை.


சமீபத்தில் வெளியான கஸ்டடி படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரத்திலேயே நடித்து கலக்கி இருந்தார்.ராஜ் மற்றும் டிகே இயக்கிய தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் ஹீரோயினாக 2 பாகங்களிலும் நடித்துள்ள பிரியாமணி ஆபாசக் காட்சிகளிலோ, லிப் லாக் முத்தக் காட்சிகளிலோ நடிக்கவில்லை.

 கடந்த 2017ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் பிரியாமணி. திருமணத்துக்கு முன்பாகவும் ஆபாசக் காட்சிகளிலும் லிப் லாக் முத்தக் காட்சிகளிலும் தான் நடிக்கவில்லை என்றும் திருமணத்துக்கு பிறகும் அப்படி நடிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளேன். எல்லாமே என் கணவருக்காகத்தான் எனக் கூறியுள்ளார் பிரியாமணி.

சில படங்களில் அதுபோன்று நடிக்கச் சொன்னார்கள். ஆனால், நான் தெளிவாக மறுத்து விட்டேன். சில பட வாய்ப்புகளும் அதன் காரணமாகவே என்னை விட்டுச் சென்று விட்டது என்றும் கூறியுள்ளார். அதிகபட்சமாக கன்னத்தில் முத்தம் கொடுப்பதுடன் மட்டுமே நிறுத்திக் கொள்வேன். அதற்கு மேல் எல்லை மீற மாட்டேன் என பேசி உள்ளார்.

20 ஆண்டுகள் சினிமாவில் நடித்து வரும் பிரியாமணி ஷாருக்கானின் ஜவான் மற்றும் அஜய் தேவ்கனின் மைதான் உள்ளிட்ட பெரிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement