உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி... வழக்கத்தை விட இந்த வாரம் கூடுதல் சுவாரஸ்யங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் மற்ற போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி... போட்டியாளர்கள் நீதிமன்றம் வரை சென்று வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் மாறி விளையாடி வருகிறார்கள்.
அந்த வகையில் போட்டியாளர்கள் தமக்கு தவறு என்று தோன்றும் விடயங்களை சுட்டிக்காட்டி வழக்காடி வருகின்றனர்.அந்த வகையில் கதிரவன் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் சிலர் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவுவதில்லை என்ற குற்றச்சாட்டினை வைத்திருந்தார்.
அதில் அமுதவாணனைஅழைத்து விசாரணை நடத்திய போது அவர் மணிகண்டன் தான் அதிகமாக இந்த வேலை செய்வதாக கூறியுள்ளார்.இதனை மணிகண்டனும் ஏற்றுக் கொண்டதோடு இனிமேல் இந்தத் தவறை செய்யமாட்டோன் என கூறியதையும் காணலாம்.
Listen News!