• Sep 20 2024

ராதிகாவை நான் அம்மா என்று கூப்பிட மாட்டேன்….வரலட்சுமி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் திறமையான முன்னணி நடிகை எனப் பெயர் வாங்கியவர் நடிகை வரலட்சுமி.

ஹீரோஜினாக நடிக்கும் படங்களை விட இவர் வில்லியாக நடிக்கும் படங்களே பெரியளவில் ஹிட்டாகி இவருக்கு அதிகளவான ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றினை அளித்திருந்தார்.

அதில் "நீங்கள் ஏன் ராதிகாவை ஆன்ட்டி எனக் கூப்பிடுகிறீர்கள்" எனக் கேட்டிருந்தார்கள்.

அதற்குப் பதிலளித்த வரலட்சுமி "நான் எதற்கு ராதிகாவை அம்மா என்று கூப்பிட வேண்டும், அவர் ஒன்றும் எனக்கு அம்மா கிடையாது, எனது அப்பாவின் இரண்டாவது மனைவி அவ்வளவு தான்" என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் " ராதிகாவை நான் வெறுக்கவில்லை, அவருக்கும் எனக்கும் நல்ல உறவு உள்ளது, இருவரும் சேர்ந்து பணியாற்றுகின்றோம், அதனால் அவரை அம்மா என்று எப்பிடிக் கூப்பிட முடியும்?' எனத் தெரிவித்திருந்தார்.

அத்தோடு "என்னுடைய அம்மா தான் எனக்கு அம்மா, அவரைத் தான் நான் அம்மா என்று கூப்பிட முடியும், ஒரு அம்மா தான் இருக்க முடியும், ராதிகாவை நான் ஆன்ட்ரி என அழைத்திருந்தாலும் எங்கள் குடும்ப உறவு நன்றாக தான் உள்ளது. வேலையில்லாதவர்கள் எதையாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். குரைக்கிற நாய் குரைத்துக் கொண்டுதான் இருக்கும். வேறு வேலை இருந்தால் ஏன் சோஷியல் மீடியாவில் கமெண்ட் போட்டுக் கொண்டிருக்கப் போகின்றார்கள்" எனவும் பேசியுள்ளார்.

ராதிகா பற்றியும் தனது குடும்பம் பற்றியும் ஓப்பனாகப் பேசிய நடிகை வரலட்சுமியின் பேச்சு வரவேற்பை பெற்றிருந்தாலும் சோஷியல் மீடியாவில் கமெண்ட் போட்டுக் கொண்டிருப்பவர்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியிருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement