• Sep 21 2024

சாகும் வரை அவரை மறக்கமாட்டேன்- தளபதி விஜய் இத்தனை மரியாதைக்குரியவரா?- நெகிழ்ந்து பேசிய பிரபல நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் தான் பீஸ்ட். இப்படத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்திருந்தார்.இருப்பினும் இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இருப்பினும் தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே உடன் விஜய் ஆடிய டூயட் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன. அனிருத் இசையில் தூள் கிளப்பி இருந்த இந்த படம் வசூல் ரீதியில் நல்ல கல்லா கட்டியிருந்தது.

தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் வாரிசு படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மீகா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், யோகி பாபு, குஷ்பூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

குடும்ப செண்டிமெண்ட் கலந்த கமர்சியல் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. ஐதராபாத், சென்னையை அடுத்து மீண்டும் இந்த படம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக பேசப்படுகின்றது.

அந்த வகையிகள் தற்போது கலகலப்பு படத்தில் சந்தானத்துடன் நடித்திருந்த சண்டைக்கலைஞர் கிருஷ்ணா விஜய் பற்றி குறிப்பிட்ட விடயம் ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது நடிகர்களிலேயே விஜய் தான் சண்டை கலைஞர்களை மதிக்கும் ஒரே நடிகர் எனக் குறிப்பிட்டுள்ள கிருஷ்ணா அவரை சாகும் வரை மறக்க மாட்டேன் என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement