• Sep 21 2024

“நானும் மறுமணம் செய்து பிள்ளை பெற்றுக்கொள்வேன்..” சவால் விட்ட மோனிகா ரிச்சர்ட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இசையமைப்பாளரான டி இமான் கடந்த டிசம்பர் மாதம் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் திருமணம் ஆகி 12 ஆண்டுகள் கழித்து மனைவியை விவாகரத்து செய்தார் இமான். இமான் தனது மனைவியை திடீரென விவாகரத்து செய்த சம்பவம் ரசிகர்களிடத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இவ் விவாகரத்து அறிவித்த கையோடு ஊடகங்களுக்கு பேட்டியளித்த இமான் ஒரு விதவை அல்லது விவாகரத்தான பெண்ணை மறுமணம் செய்து கொள்வேன் என்று குறிப்பிட்டார். இதனால் நிச்சயம் இமான் இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இமான் இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.

மறைந்த ஆர்ட் டைரக்டர் உபால்டு என்பவரின் மகள் எமலி உபால்டை இரண்டாவது திருமணம் செய்தார்.மேலும் அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட இமான், எமலின் மகள் இனி தனது மூன்றாவது மகள் என்று தெரிவித்து இருந்தார். மேலும் இதுவரை சோதனை காலத்தை அனுபவித்ததாகவும், அப்போது துணையாக இருந்தவர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இதனை பார்த்த இமானின் முன்னாள் மனைவியான எமலி 12 ஆண்டுகள் உங்களுக்காகவே வாழ்ந்த ஒருவரின் இடத்தை எளிதாக ரீப்ளேஸ் செய்து விட்டீர்கள். குழந்தைகளுக்கும் மாற்று பார்த்து விட்டிர்கள், நான்தான் முட்டாள் என்று காரசாரமாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில் இமானின் இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

மேலும் அதில் இமான் விதவை பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுத்ததை குறிப்பிட்டுள்ள பயில்வான் ரங்கநாதன், அவரது முன்னாள் மனைவியான மோனிகா ரிச்சர்டு இமானுக்கு சவால் விட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது தானும் இன்னொரு திருமணம் செய்து கொள்வேன் என்றும் தேவைப்பட்டால் குழந்தை பெற்றுக்கொள்வேன் என்றும் மோனிகா கூறியதாக தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

உண்மையிலேயே மோனிகா ரிச்சர்டு, இமானிடம் இப்படி சவால் விட்டாரா என்பது தெரியவில்லை. இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமான் இரண்டாவது திருமணம் செய்துள்ள எமலியின் தந்தையான மறைந்த ஆர்ட் டைரக்டர் உபால்ட் பயில்வான் ரங்கநாதனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement