கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில், அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.இப்படத்தில் சிம்பு 'முத்து' எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.ரெட் ஜெயன்ட் நிறுவனம்,தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.
இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (02.09.2022) பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு, கௌதம் மேனன், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, யோகி பாபு எனப் பலரும் கலந்து கொண்டனர்.அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய யோகிபாபு கூறியதாவது "வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆவதற்கு இறைவனை நான் வேண்டிக் கொள்கிறேன். மண்டேலா திரைப்படம் பார்த்து விட்டு, நிச்சயமாக ஒரு நாள் யோகி பாபுவை வைத்து டைரக்ட் பண்ணுவேன் என்று கௌதம் மேனன் சார் குறிப்பிட்டார். மிக்க நன்றி சார், நீங்கள் தான் அந்த படத்தை பார்த்து பதிவிட்ட முதல் இயக்குநர்
உங்களுடைய மின்னலே திரைப்படத்திலிருந்தே நான் உங்கள் ரசிகன். அதே போல, வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் நம்முடைய குடும்ப நிறுவனம் போல் ஆகிவிட்டது. அடுத்தடுத்து அவர்களுடைய திரைப்படத்தில் நடிக்கிறேன்.முன்னதாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தேன்.சிம்பு சாரைப் பொறுத்தவரை அவருடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' திரைப்படத்தில் நடித்தேன்.
சிம்பு நடிப்பதை உடனிருந்து பார்த்திருக்கிறேன். அவர் நடித்து முடித்து விட்டு எப்படி இருக்கிறது என கேட்பார். சிங்கிள் ஷாட்டில் பண்ணி விட்டு வருவார், வேறு மாதிரி இருந்தது என்று சொல்வேன். இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. என்னை பேசுவதற்கு அழைத்த அனைவருக்கும் நன்றி" என யோகி பாபு கூறி இருந்தார்.
Listen News!