தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகர் சிம்பு. ஆரம்பகாலங்களில் துருதுருவென கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரது குடும்பங்களிலும் ஒரு உறுப்பினராகவே மாறியவர்.
காலக்கொடுமை இடையே சினிமா இவரை ஒதுக்கி வைத்திருந்தது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கம்பேக் கொடுத்து மீண்டும் தனது ராஜ்ஜியத்தை உருவாக்கினார் சிம்பு. மாநாடு படம் சிம்புவிற்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது.
யாருமே எதிர்பார்க்காத அளவில் திரும்பி வந்தார். ஆரம்பகால படங்கள் பெரும்பாலும் அடல்ட் படங்களாகவே அமைந்தன. அதனாலேயே சிம்பு மீது வேறு மாதிரியான இமேஜ் கிரியேட் ஆகியிருந்தது. அதை மாநாடு திரைப்படம் மூலம் சுக்கு நூறாக உடைத்தார்.
இதனை அடுத்து இவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
லையில் இவரின் புதிய லுக் போட்டோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தமது லைக்குகளைக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!