• Sep 20 2024

"நீ வெற்றி பெறுவதை பார்க்காமல்,நான் போகமாட்டேன்- அம்மாவை நினைத்து மனமுருகிய ஏ.எல் விஜய்யின் சகோதரன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் இரு புதல்வர்கள் தான் ஏ.எல் விஜய் மற்றும் ஏ.எல் உதயா. இதில் விஜய் திரைப்பட இயக்குநராகவும் உதயா திரைப்பட நடிகராகவும் வலம் வருகின்றனர்.

மேலும் உதயா னி எல்லாம் சுகமே, திருநெல்வேலி, கலகலப்பு, ஷக்கலக்க பேபி, தலைவா, மாநாடு உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் சினிமாவில் அவரால் இன்னும் தன்னை சரியாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், அவரின் அம்மா வள்ளியம்மை, சில தினங்களுக்கு முன்னர் காலமானார். இதனால், அம்மாவை இழந்து பெரும் சோகத்தில் தத்தளித்து வரும் உதயா, தனது அம்மா குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில், அம்மா என்றாலே தெய்வத்திற்கு சமமானவர் தான், ஆனால், எங்களுக்கு இன்னும் ஒருபடி மேல் எனக் குறிப்பிட்டுள்ளார். நான் உட்பட விஜய், தங்கை மூவரையும் ஒரேமாதிரி தான் நடத்துவார் என்றும், தன்னை செந்தில் என்றே அழைப்பார் . நடிக்க வேண்டும் என்ற ஆசையை முதலில் அம்மாவிடம் தான் சொன்னதாகவும், அவரே அப்பாவை சம்மதிக்க வைத்து, தான் நடிகனாக காரணமாக இருந்தார்

நடிக்கத் தொடங்கியதில் இருந்து, 22 வருடங்களாக தனக்கு மிகப்பெரிய பக்கபலமாகவும், ஊக்கமாகவும் இருந்தது அம்மா தான். அவர் தான் "நீ நிச்சயம் பெரிய அளவில் ஜெயிப்பாய்," என்று தன்னிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார்.. தான் பெரிய வெற்றியை அடைந்துவிட வேண்டும் என அவர் போகாத கோயில் இல்லை, செய்யாத பிரார்த்தனைகள் இல்லை.

தம்பி விஜய் போன்று சினிமா மூலம் பொருளாதார ரீதியாக அம்மாவுக்கு பெரிதாக எதுவும் செய்யமுடியவில்லை. இருந்தாலும், அம்மா கை காட்டிய பெண்ணையே திருமணம் செய்தேன். அம்மாவிற்கு தன்னால் பணம் கொடுக்க முடியவில்லை என்றாலும், அதிகமதிகமாக பாசத்தையும் அன்பையும் கொடுத்தேன. ஆனால், அதையும் கூட அம்மா தனக்கு பல மடங்கு அதிகமாக திருப்பித் தந்துள்ளார்.

அம்மாவின் உடல்நிலை முடியாமல் போனபோதெல்லாம், மருத்துவர்களே ஆச்சரியப்படும் வகையில் அவர் மீண்டு வந்தார். அப்போதெல்லாம் "நீ வெற்றிப் பெறுவதை பார்க்காமல், தான் போய் விடமாட்டேன் என புன்னகை மலர கூறி தன்னை தட்டிக் கொடுத்தார். 'She is a Fighter' ஆனால், யாருமே எதிர்ப்பார்க்காத போது, எங்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு சென்று விட்டார்.

தனக்கு பாசத்தை பெரிதாக வெளிப்படுத்த தெரியாது என்ற போதும், அம்மா இறப்பதற்கு முன் அவரிடம் நிறைய பேசினேன். அப்போதும் அவர் தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் போய் விட்டால் தான் அனாதை என்று உறவினரிடம் சொன்னபோது, "அப்படியெல்லாம் உன்னை விட்டு செல்லமாட்டேன்" என்று அம்மா நம்பிக்கையோடு கூறினார். ஆனால் இன்று அவர் எங்களுடன் இல்லை என மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.ஒருவருக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாக அம்மா திகழ்ந்தார். வீட்டுக்கு வரும் யாரும் சாப்பிடாமல் செல்லக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பார் . அந்த அன்பின் காரணமாக, அம்மா இறந்ததும் எங்கெங்கிருந்தோ எல்லாம் வந்த ஏராளாமானோர், அவருக்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர் என குறிப்பிட்டுள்ளார். .

அப்பா, நான், விஜய், தங்கை என வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட எங்கள் நால்வரையும் தாங்கிப் பிடித்தது அம்மா தான் என கூறியுள்ள உதயா,. குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என கற்றுக் கொடுத்ததும் அவர் தான் கூறியுள்ளார். மேலும், கணவன் - மனைவி உறவு, பெற்றோரிடம் நடந்து கொள்ள கூடிய முறைகள், பிள்ளைகளை வளர்ப்பது என எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் மிகச்சிறந்த உதாராணமாக திகழ்ந்த அவருக்கு. பேரக்குழந்தைகளை மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

தம்பி விஜய்யும் தானும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் விருப்பம், தலைவா படத்தில் கை கூடியது. தம்பி விஜய் தான் அம்மாவிற்கு மிகச்சிறந்த சிகிச்சையை உறுதி செய்தார். குடும்பத்தினர் அனைவரும் அம்மாவை உடனிருந்து கவனித்தோம். இருந்தாலும் எதிர்ப்பார்க்காத தருணத்தில் எங்களை விட்டு அம்மா பிரிந்து சென்று விட்டார் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement