• Sep 20 2024

'அதை செய்யலனா பக்கத்துல படுக்கமாட்டேன்' என கூறிய மனைவி. - மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களால் இசைப்புயல் என்று அழைக்கப்படுபவர். ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று அசத்தினார்.


தமிழில் வென்று காட்டிய ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்ததாக பாலிவுட் சென்று அங்கும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டார். அதனையடுத்து ஹாலிவுட் சென்ற அவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள், கோல்டன் குளோப் விருது, கிராமி விருதுகளை அள்ளினார். இதன் காரணமாக உலகம் முழுவதும் பிரபலமடைந்தார்.


ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இப்போது வேண்டுமானால் ஆஸ்கர் விருதும் அதுதவிர்த்து மற்ற விருதுகளும் அடையாளமாக இருக்கலாம். ஆனால் அவரது ஆரம்பகால அடையாளம் அவர் வளர்த்த நீண்ட முடிதான். அந்த முடியோடு வந்தே மாதரம் ஆல்பத்தில் தோன்றிய ரஹ்மானை பார்த்து இளைஞர்கள் பித்து பிடித்து அடிமையாகினர். ஒருகட்டத்துக்கு மேல் அவர் தனது நீளமான முடியை எடுத்துவிட்டார்.


இந்நிலையில் அதற்கான காரணம் குறித்து அவர் தெரிவித்திருக்கிறார். ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அவரிடம் எதற்காக நீண்ட முடியை எடுத்துவீட்டீர்கள் என தொகுப்பாளர் கேட்க, "அது ஒன்னுமில்லை. நீண்ட முடி வெச்சிருந்தா என் பக்கத்துல படுக்கமாட்டேனு பொண்டாட்டி சொல்லிட்டார்.நாங்கதான் அப்படி வெச்சிருக்கோம். நீ ஏன் இப்படி வெச்சிருக்க எனவும் கேட்டுவிட்டார். அதனால்தான் எடுத்துவிட்டேன்" என தெரிவித்திருந்தார்.இந்த வீடியோவினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement