• Sep 20 2024

'நம்பிக்கையுடன் முன்னேறிக்கொண்டிருப்பேன்' - அனைவருக்கும் நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் விக்ரம் பிரபுவுடன் இது என்ன மாயம் திரைப்படத்தில் அறிமுகமாகினார் நடிகை கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜனி முருகன் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.

இதையடுத்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை வைத்து உருவான திரைப்படம் நடிகையர் திலகம், இப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்தார்.இதற்காக தேசிய விருதையும் பெற்றார். இதைத்தொடர்ந்து ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் முன்னணி நடிகையாக வலம்வருகின்றார்.

தனக்கான கதையம்சத்தை தேர்ந்தெடுத்து வரும் கீர்த்தி தற்போது சர்காரு வாரி பாட்டா படத்தில் மகேஷ் பாபாவுக்கு ஜோடியாகவும், சாணிக்காகிதம் படத்தில் மிகவும் வித்தியாசமான ரோலிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நீண்ட அறிக்கை ஒன்றை சமுகவைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.அதில், " ஒரு நடிகராக இருப்பது என்பது கடினமான பயணம், நாங்கள் முழுவது உயர்வையும் தாழ்வையும் காண்கின்றோம். அதுவே பெரும்பலாலும் நமது இலக்கை தீர்மானிக்கிறது. சமீபகாலம் எனக்கு ஒரு சோதனையான காலகட்டமாகும், மேலும் எனது சிறப்பை உலகிற்கு கொண்டு வருவதற்கு நான் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதை உணர வைத்த ஒரு கட்டம். என் இதயம் முழுவதும் நன்றி உணர்வோடும் சந்தோஷமும் நிறைந்துள்ளது.

"சாணிக்காயிதம்" மற்றும் "சர்காரு வாரி பாட்டா" படங்களுக்கு நிறைய அன்பு கிடைத்தது. நான் எப்போதும் எல்லைகளை தாண்டி, விரிவுபடுத்தப்பட்ட நம்பிக்கையோடு முன்னேறி கொண்டு இருப்பேன். விளைவுகளை பற்றி கவலைப்படமாட்டேன்" என்று பதிவிட்டு ‘சாணி காயிதம்’, ‘சர்காரு வாரி பாட்டா’ பட குழுவினருக்கும், அவர் பணியாற்றிய இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement