• Sep 20 2024

உதவி இயக்குநர்கள் மது அருந்தி விட்டு என்னை அறையும் படி கூறுவேன்- அதிர்ச்சித் தகவலைக் கூறிய இயக்குநர் மிஷ்கின்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் மிஷ்கின். இவர் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் ஹீரோ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து தற்பொழுது பிசாசு 2 gடத்தை இயக்கி முடித்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். இதன் முதல் பாகம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்தே இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் மிஷ்கினின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் தான் இயக்குநர் ஸ்ரீ கனேஷ் இவர் இயக்கத்தில் வெளியான 8 தோட்டக்கள் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்து இருக்கிறது.

அப்படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வாவை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இன்று இப்படத்தின் விழா நடந்துள்ள நிலையில் அதில் கலந்து கொண்டு பேசியுள்ளார் இயக்குநர் மிஷ்கின். அதில் “தனது உதவி இயக்குநர்களை எனது ஆபிஸ்-க்கு வந்தவுடன் முதலில் மது அருந்த தான் சொல்லி தருவேன்.

அதை குடித்துவிட்டு உளறு, மனதில் இருப்பதை பேசு, என்னை அடி, ஆனால் என்னிடம் உண்மையாக இருக்க வேண்டும். மேலும் எனது எந்த ஒரு உதவி இயக்குநர் நல்ல திரைப்படம் இயக்கவில்லையோ, அவன் என் உதவியாளரே கிடையாது” என பேசியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement