• Sep 20 2024

தனுஷ் மன்னிப்பு கேட்காவிட்டால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும்- மதுரை தம்பதியினரால் ஏற்பட்ட பரபரப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிஸயான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக மாறன் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இருப்பினும் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது நானே வருவேன் திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவை விரைவில் திரைக்கு வரவும் காத்திருக்கின்றன. அத்தோடு மனைவியைப் பிரிந்திருந்தாலும் தனது கெரியரிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

மேலும் நடிகர் தனுஷை தனது என உரிமை கோரி மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி என்ற தம்பதியினர் பதிவு செய்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோருக்கு இந்த தம்பதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் . அதில் தங்களுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் மன்னிப்பு கோராவிட்டால் 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

https://www.youtube.com/embed/IpBdOP32lrk

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement