தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் அட்லி. ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார் அதன் பிறகு தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார் அட்லி. விஜய்யின் மார்க்கெட் உயர அட்லியின் படங்கள் மிகப்பெரிய காரணமாக அமைந்தது.
இதனை அடுத்து நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் படத்தை இயக்கியிருந்தார்.அட்லி ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. அந்த வகையில் ஜவான் திரைப்படம் இதுவரை முதல் நாளில் மட்டும் 150 கோடி வரை வசூலித்துள்ளது.
தமிழகத்திலும் வசூல் சிறப்பாக இருப்பதால் இப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலை தொடும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அட்லிக்கு ஒரு மிகப்பெரிய சென்டிமென்ட் இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது அட்லி கதை சொல்லப்போகிறார் என்றால் அவருக்கு ராசியான ஒரு ஷர்ட் ஒன்று இருக்கின்றதாம்.
அதை போட்டுகொண்டு தான் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்வாராம். ராஜா ராணி படத்தில் துவங்கி கடந்த பல வருடங்களாக அட்லி இந்த சென்டிமென்டை பின்தொடர்ந்து வருகிறாராம். இதனை ஒரு பேட்டியில் அட்லியே கூறியுள்ளார். இந்நிலையில் ஜவான் படத்தை தொடர்ந்து அட்லி அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Listen News!