• Sep 21 2024

வாய்ப்பு கிடைத்தால் சமந்தா பங்குபற்றிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்-நாகசைத்தன்யா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் கோஹர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி காஃபி வித் கரண்.மேலும் அந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு பல தகவல்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டு வாழ்க்கை, கெரியர், விவாகரத்து குறித்து பேசினார்.எனினும் இதையடுத்து நாக சைதன்யாவுக்கும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆசை ஏற்பட்டிருக்கிறது.

மேலும் இது குறித்து பேட்டி ஒன்றில் நாக சைதன்யா தெரிவித்திருப்பதாவது…

வாய்ப்பு கிடைத்தால் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன். கரண் ஜோஹரின் வேலை எனக்கு பிடிக்கும். நான் விருந்தினராக வர வேண்டும் என்று அவர் விரும்பினால், ஏன் போகக் கூடாது?

மேலும் என் தனிப்பட்ட வாழ்க்கை வேலையை பாதிக்காதபடி இருக்கிறேன். ஆனால் மீடியாக்களில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை தலைப்புச் செய்தியாக மாறும்போது எரிச்சலாவகவும், வேதனையாகவும் இருக்கிறது.

அத்தோடு என்னுடைய பர்சனல் மற்றும் ப்ரொஃபஷனல் வாழ்க்கையை நான் ஒன்றாக்கவில்லை, ஆனால் அதுவாக ஆக்கப்பட்டது. என் படங்களுடன் என் தனிப்பட்ட வாழ்க்கையை ஒப்பிடுவது கவலை அளிக்கிறது. ஆனால் அதை ஒன்றும் செய்ய முடியாது.

வேலையில் மட்டும் கவனம் செலுத்து, கடினமாக உழை, நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement