நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.இப்படம் வெளியான 5 நாள்களில் உலகளவில் ரூ.62.11 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் வெற்றிவிழா அண்மையில் நடந்தது.அதில் பேசிய எஸ்.ஜே சூர்யா கூறியதாவது ஒரு பழுத்த பழமாக கேங்க்ஸ்டாராக நீங்க இந்த படத்தில நடிக்கிறீங்களு ஆதிக் ரவிச்சந்திரன் சொல்ல ஆரம்பிச்சாரு.
இப்பவே என்னைய கிழவன் ஆக்காதீங்க சார்னு சொல்லி,கதையே கேட்காம அவரை அனுப்பி விட்டேன்.ஒருநாள் விஷாலை சந்திச்சேன். கதையை கேட்டிட்டு ஓகேனா பண்ணுங்க, இல்லைனா விட்டிருங்கனு சொன்னாரு.அன்னைக்கு மட்டும் விஷாலை சந்திக்கலைனா இந்த படத்துல நான் இருந்திருக்கவே மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!