கமல்ஹாசன், நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த மாதம் 3ம் திகதி வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இந்தப் படத்தில் , விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவரக்ளுடன் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் வெளியாகிய நாளிலிருந்து ரசிகர்களிடையே அதிகளவான வரவேற்பையும் பெற்று வருகின்றது. இதனால் கமல் மகிழ்ச்சியடைந்த கமல் படக்குழுவினருக்கு பல்வேறு பரிசுகளை வழங்கி பாராட்டி வருகிறார்.
இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து இன்று பேட்டியளித்த கமல்ஹாசன் “நன்றியை தவிர சொல்வதற்கு வார்த்தை எதுவும் இல்லை. சந்தோஷத்தை கடந்து வெற்றி பயத்தை கொடுத்திருக்கிறது. வெற்றி கிடைத்தது போதும் என்று எண்ணவில்லை. இன்னும் வெற்றிகாக உழைப்போம்” என கூறியுள்ளார்.
மேலும் “ரஜினியோடு இணைந்து நடிக்க நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். ரஜினிகாந்தும், லோகேஷ் கனகராஜும் முடிவு செய்தால் நான் நடிக்க தயார்” என கூறியுள்ளார். நீண்ட காலம் கழித்து கமல் – ரஜினி ஒரே படத்தில் இணையும் வாய்ப்பு உருவாகியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்து.
பிற செய்திகள்
- நயன் திருமணம்; நாயும் வோக்கிங் போகக் கூடாதா?
- திருமணத்திற்காக நாத்தனாருக்கு மட்டும் இத்தனை பவுன் நகைகளை அள்ளி கொடுத்துள்ளாரா நம்ம நயன்-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- விக்கி – நயன் திருமணத்தில் அசத்தலான விருந்து.. வெளியானது மெனு லிஸ்ற்..!
- செம வசூல் வேட்டை நடத்திய விக்ரம் படம்-வெளியானது முழு விபரம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!