• Sep 20 2024

சிம்பு ஓகே சொன்னால் புதியபாதை 2 படத்தை எடுக்க நான் ரெடி- புதுப்புதுத் திட்டங்களைக் கூறிய பார்த்திபன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பார்த்திபன்,வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், ப்ரியங்கா ரூத், ப்ரிகிடா சகா, ஆனந்த்கிருஷ்ணன் என பெரிய நடிகர் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் தான் இரவின் நிழல். இப்படத்தை மொத்தமாக 96 நிமிடங்களில் எடுத்துள்ளனர்.

இப்படம் ஜூலை 15ந் தேதி வெளியாக உள்ளது. இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குநர் பார்த்திபன், படத்தை உருவாக்க பட்ட கஷ்டம் மற்றும் படம் எப்படி உருவானது என அனைத்தையும் மிகவும் அழகாக கூறியுள்ளார். அதில், சினிமாவிற்கு வந்து 32 வருஷம் ஆச்சு புதியபாதை போல படத்தை கொடுத்திருந்தாலும், ஒத்தசெருப்பு திரைப்படத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருந்தாலும், இந்த படத்திற்கு என்ன பண்ண வேண்டும், மக்களை எப்படி பார்க்கவைப்பது என்ற போராட்டம் உள்ளது.

ஜெயிலர், வாரிசு தலைப்பு வைத்தாலே பெரிய நடிகர்களின் படம் ஓடிவிடும் ஆனால், இதுபோன்ற படங்களுக்கு தலைப்பு ரொம்ப முக்கியம். மனதை தூண்டுவது போலவும், தூண்டில் போடுவது போலவும் வேறவேற விஷயம் தேவைப்படுகிறது. அப்படி யோசித்த போது வந்த பெயர் தான் இரவின் நிழல், இரவிற்குள் ஒரு கண்ணுக்கு தெரியாத ஓர் வெளிச்சம் உள்ளது. அதுதான் இரவின் நிழல் என்று படத்தின் தலைப்புக்கு அழகாக விளக்கம் அளித்தார்.

இரவின் நிழல் திரைப்படத்தில் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் டாப் ஹீரோக்கள் நடித்திருந்தால் இந்த படத்தின் விலையே மிகவும் பெரிதாக இருந்து இருக்கும். ஜாலியா நான்கு பாட்டு.. ஒரு டான்ஸ்னு ஒரு பெரிய நடிகரை வெச்சு படம் எடுக்கும் பிளான் இருக்கு. ஆனால், ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற படங்களை எடுத்துள்ளதால், கமர்சியல் படம் எடுத்தால் கூட அதுவும் வித்தியாசமாக இருக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய பார்த்திபன் சிம்புவை வைத்து புதியபாதை 2 எடுக்கும் திட்டம் இருப்பதாகவும், சிம்பு ஒகே சொன்னால், அடுத்த மாதமே படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.புதிய பாதை வந்த போது பல பெண்கள் அந்த கதையை விமர்சித்தார்கள். மீண்டும் விமர்சனம் இல்லாமல் கதையில் ஒரு பெரிய மாற்றத்துடன் புதிய பாதை ரீமேக் விரைவில் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement