நகைச்சுவை நடிகர்,குணசித்திர நடிகர், தொகுப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவரான மயில்சாமி. பல முன்னணி நடிகர்களுடன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்த அவருக்கு வயது 57. இவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கோதண்டமும் அவருடன் இணைந்து நடித்துள்ள அனுபவம் குறித்து தன்னுடைய கருத்துக்களை தற்போது பகிர்ந்திருக்கின்றார். அதாவது "சமீபத்தில் ஒரு படத்தில் அவர் கூட சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கின்றது. எல்லாரும் சொல்லுவாங்க, அவரு வந்து நிறைய உதவி பண்ணுவாரு என்று. ஆனால் சத்தியமாக நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்திருக்கேன் நிறைய கொடுத்திருக்காரு, அதாவது ஷூட்டிங் பார்க்க வந்தவர்களுக்கு எல்லாம் தன் கையில் இருந்த பணத்தைக் கொடுத்தாரு அதை நான் நேரிலேயே பார்த்தேன்" என்றார்.
மேலும் "அதேமாதிரி அவர் ஒரு மிகப்பெரிய சிவன் பக்தன். அந்தப் படத்தில் இதே மாதிரி ஒரு காட்சி அவருக்கு. இறந்து போற மாதிரி அவர் சீன் இருந்தது. இந்த மாதிரி சீனில் நடிக்காதீங்க அண்ணா என்று சொன்னப்போ, அதற்கு அவரு 'சிவன் கூப்பிட்டால் நான் போய்டுவேன், எனக்கு எல்லாக் கடமையும் முடிஞ்சுது' அப்பிடி என்று சொன்னார்.
நான் ஷூட்டிங்கில் பார்த்த மாதிரியே இப்பவும் இருக்கு. அவர் செத்த மாதிரி நடித்த போது யாரெல்லாம் சுற்றி நின்று அழுதாங்களோ அவங்க எல்லாரும் இன்றைக்கு நேரில சுற்றி நின்று நிஜத்திலும் அழுறாங்க. மயில்சாமி நல்ல நடிகராக இருந்திருக்கார். நல்ல மனிதனாக இருந்திருக்கார்" எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் "ஒரு சமயத்தில் ஒரு பாட்டி ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து நின்றார். அவரைப் பார்த்து என்ன செய்றீங்க, எத்தனை வயசு என்று கேட்டாரு. உடனே அவரோட சம்பளத்தை அன்றைக்கு அந்தப் பாட்டிக்கே கொடுத்திட்டார். அந்த மாதிரி ஒரு நல்ல மனிதன் அவர்" என்றார்.
மேலும் "மனிதநேயமிக்க நல்ல மனிதனை நாங்க இழந்திட்டோம். இதற்கு ஈடு, இணை எதுவுமே இல்லை என்று தான் கூற வேண்டும். அவருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என கண்ணீருடன் பேசி முடித்துள்ளார் நடிகர் கோவை கோதண்டம்.
Listen News!