• Sep 20 2024

அந்தப் பையன் ஒல்லியாக இருக்கான் உங்களுக்குள்ள சரிப்பட்டு வராது….உண்மையை உளறிய நடிகை சோனியா அகர்வால்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 'காதல் கொண்டேன்' என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமாகி முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சோனியா அகர்வால். அறிமுகப் படத்திலேயே தனது திறமையான நடிப்பின் வாயிலாக ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர். இதனைத் தொடர்ந்து இவர் '7ஜி ரெஜின்போ காலனி, மதுர, கோவில், புதுப்பேட்டை' போன்ற பல படங்களில் நடித்திருக்கின்றார்.

சினிமாத் துறையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே அவர் இயக்குநர் செலவராகவனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமணமான சில ஆண்டுகளுக்குள்ளேயே விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்.

இவர் தற்போது படங்கள் தவிர வெப் தொடர்கள், தொலைக்காட்சி தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார். இவ்வாறாக சினிமாவிலேயே தனது கெரியரை கொண்டு நடாத்தும் நடிகை சோனியா அகர்வால் தனது அறிமுகப் படமான 'காதல் கொண்டேன்' படம் பற்றி அவரது அம்மா கூறிய ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்து இருக்கின்றார்.

அதாவது இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் "காதல் கொண்டேன் திரைப்படத்தின் கதாநாயகனான தனுஷை பார்த்ததுமே இந்த படம் உனக்கு வேணவே வேணாம் என்று அம்மா கூறினார். அந்தப் பையன் ஒல்லியாக இருக்கின்றான், உங்களுக்கு இடையே சரிப்பட்டு வராது என்றார். எனினும் எனக்கு இந்தப் படத்தின் கதை பிடித்திருந்ததால் அம்மாவின் பேச்சையும் மீறி காதல் கொண்டேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தேன்" என்கிறார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் "நான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது அதன் ஹீரோ யார் என்று பார்ப்பதில்லை, கதை நன்றாக இறக்கின்றதா என்று மட்டும் தான் பார்ப்பேன்" எனவும் குறிப்பிட்டு இருக்கின்றார். இச்சம்பவம் இடம்பெற்றது இவரது தமிழ் சினிமா அறிமுக காலத்திலாக இருந்தாலும் இச்செய்தி தற்போதும் அவரது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement