• Sep 21 2024

அப்படி நடந்தால் செய்யிறதெல்லாம் சரி ஆகிடாது,தினேஷைத் தாக்கிப் பேசிய ரச்சிதா- இப்பிடி சொல்லிட்டாரே...

stella / 9 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1ம்தேதி மிகவும் பிரமாண்டமாக ஆரம்பமாகியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், இறுதியாக கானாபாலா வெளியேறியிருந்தார். இதனை அடுத்து  இந்த வாரம் விஜே ப்ராவோ மற்றும் அக்ஷயா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவுள்ளனர் 

மேலும் இந்த வாரம் நடைபெற்ற பூகம்பம் டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் தோற்றதால் பழைய போட்டியாளர்கள் இரண்டு பேர் வீட்டிற்குள் வரவுள்ளனர் என்று கூறப்பட்டது. அதன்படி விஜய் வர்மா தற்பொழுது வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.


அத்தோடு கடந்த வாரம் நடைபெற்ற பூகம்பம் டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயங்கள் குறித்து பேசியிருந்தனர். தினேஷ தனக்கும் ரச்சிதாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவு குறித்து கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் இவர் விரைவில் ரச்சிதாவுடன் இணைய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.


இந்த நிலையில் இது குறித்து ரச்சிதா ஒரு பதிவினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார்.அதாவது ஒருவர் கண்ணியமாக நடந்து கொண்டால் அவர் செய்வது எல்லாம் சரி என்று ஆகாது எனத் தெரிவித்துள்ளார். அத்தோடு கர்மா பார்த்துக் கொண்டிருக்கின்றது என்றும் கோபமாகப் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement