• Sep 20 2024

நல்ல கதை என்றால் இப்படி நடிக்கவும் தயார்…அருண் விஜய்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு, தமிழ் திரையுலகில் வாரிசு நடிகராக 1995ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அருண் விஜய்.

மேலும் இதை தொடர்ந்து பல அடிகள் சினிமாவில் வங்கிய போதும், அருண் விஜய் தனது விடா முயற்சியை கைவிட்டதில்லை. பிரியம், கங்கா கௌரி, இயற்க்கை, பாண்டவர் பூமி என்று பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியபோதும், அவரால் திரையுலகில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.

ஆனாலும் தனது தொடர் முயற்சியால் இன்று அருண் விஜய் மிகப் பெரிய நடிகராக, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை தற்போது கைப்பற்றி உள்ளார்.

இவ்வாறுஇருக்கைில் 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் திரையுலகில் அருண் விஜய்க்கு வேறு லெவல் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

குற்றம் 23, தடம், செக்கச்சிவந்த வானம், சகோ என்று அதிரடியாய் தொடர் வெற்றிகள் குவிய தொடங்கியது.மேலும் பெரிய இயக்குநர் படங்களையும், பெரிய பட்ஜெட் படங்களையும் தேர்வு செய்து நடிப்பதை விட, சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

இந்நிலையில் தற்போது, ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி கடலூரில் நடந்தது. இதில், பேசிய அருண் விஜய், இப்படம் மிகச்சிறபாக வந்துள்ளது. இப்படத்திற்கு என்னால் முடிந்த உழைப்பை கொடுத்திருக்கிறேன். மீண்டும் நல்ல கதையுள்ள படத்தில் வில்லனாக நடிக்க தயாராக உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement