பிரபல நடிகர் விஜய் அவர்களின் லியோ படம் தற்போது பல சர்ச்சைகளுக்கு முகம் கொடுத்து வருகிறது. அந்த அந்த வகையில் ஏராளமான கேள்விகளும் எழுந்து வருகின்றனர், இந்த படம் வெளிவந்தாலும் வெற்றி அடையுமா என்ற கேள்வி தற்போது நிலவி வருகிறது. ஆனாலும் வெளியாகிய ட்ரெய்லர் ரசிகர்களால் நல்ல வரவேட்பை பெற்றது. இருப்பினும் தற்போது இன்னுமோர் பிரச்சினை மறுபடி எழுத்துள்ளது.
வருமான வரித்துறைக்கு எதிராக நடிகர் விஜய் அளித்த வழக்கு தாக்கல் விசாரணை எதிர் வரும் 30 திகதி ஒத்திவைக்க பட்டுள்ளது. இந்த வழக்கானது புலி படத்திற்க்கு நடிகர் விஜய் 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகவும் அதனை அவர் மறைத்து விட்டார் என்றும் நடிகர் விஜய் மீது வருமான வரித்துறை குற்றம் சுமத்தியது. இதனால் நடிகர் விஜய் அவர்களுக்கு 1 அரை கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனை அடுத்து விஜய் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் வருமான வரித்துறை முதல் தாக்கல் செய்ததை அடுத்து நடிகர் விஜய் தரப்பில் கால அவகாசம் கெட்டப்பட்டது.இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணையானது எதிர்வரும் 30 திகதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.
Listen News!