• Sep 20 2024

'2 தோசை ஒரு வடை இருந்தா போதும் அப்படியே காலத்த ஓட்டிடுவாரு! விஜய் குறித்து மனம்திறந்த தயாரிப்பாளர்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

'தளபதி விஜய்க்கு 2 தோசை ஒரு வடை இருந்தா போதும்' என நடிகர் விஜய் குறித்தும் லியோ படம் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் லலித் குமார். மேலும் அவர் கூறுகையில், 

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்க்கு பிரம்மாண்டமான பரிசை அளிக்க தான் விரும்பினேன்.எனினும், மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்தே விஜய்க்கு பரிசளிக்க விரும்பிக்கேட்டேன். ஆனால் அவர் சம்பளம்தான் கொடுத்துள்ளாயே, பரிசெல்லாம் வேண்டாம் என்று மறுத்துட்டார்.  

தமிழகத்தில் லியோ படத்தின் சிறப்பு காட்சிகள் இல்லாததால் 2 லட்சம் பேர் மற்ற மாநிலங்களுக்கு படையெடுத்தனர்.இதனால்தான் தான் இந்த விஷயத்தில் நீதிமன்றத்தை நாடியதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் விஜய் தலையிடவில்லை என்றும் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய அவர் ஆலோசனை தான் வழங்கினார்.ஆனால் மற்ற மாநிலங்களில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை தடுக்க தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 


அதேவேளை, பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சரியான ரிலீசைதான் விஜய் விரும்பினார். அதனால் அவர் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் லலித்குமார் மேலும் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமில்ல, 'மாஸ்டர் ரிலீசின்போதே தப்பாச்சுன்னா வாசல்ல நிக்க மாட்டேன்' என்று தான் விஜய்யிடம் கூற, அதற்கு அவர் 'தப்பாச்சுன்னா உன்னை பார்த்துக்கறேன் 'என்று பதிலளித்ததாகவும்  குறிப்பிட்டார். 

இதேவேளை, 'மற்ற நடிகர்களை போல விஜய் ஹை லெவலான உணவுகளை வாங்கி உண்ணவே மாட்டார். அவருக்கு பிடித்த தோசையும் வடையும் தான் சாப்பிடுவார். அதிலும் 2 தோசை மட்டும் தான் சாப்பிடுவார்' என விஜய் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டார் தயாரிப்பாளர் லலித் குமார்.

Advertisement

Advertisement