தமிழ் திரையுலகில் பிரபல வில்லனாக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் 'சரக்கு' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். மேலும், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது இதில் கலந்து கொண்ட
கூல் சுரேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளரிடம் காலத்தில் மாலையை போட்டார். உடனடியாக அந்த பெண் மேடையிலேயே மாலையை கழட்டி வீசி எறிந்திருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை குறித்து பேசிய தொகுப்பாளர் ஐஸ்வர்யா, எனக்கு அந்த சம்பவம் இப்போது நினைத்தாலும் அதிர்ச்சியா இருக்கு. பொது மேடையில் திடீர்னு இப்படி நடந்துகிட்டா என்னங்க செய்ய முடியும்? எனக்கு அப்பவே அவரை அடிச்சி இருக்கனும் என தோணுகிறது.
இதற்கு முன்னாடியும் என்னிடம் அப்படி நடந்திருக்கிறார். இனி அப்படி செய்தால் கன்னத்துல ஒரு அடியாவது கொடுத்திடுவேன் இல்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிடுவேன் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!