பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக ஓபன் நாமினேஷன் நடைபெற்றது.இந்த முறையில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்சி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினார்கள். இதனை அடுத்து இந்த வாரம் வழக்கம் போல் கன்பெஷன் ரூமில் தான் நாமினேஷன் நடைபெற்றது.
இதில் ஒவ்வொருவராக வந்து தாங்கள் வெளியேற்ற விரும்பும் போட்டியாளர்களின் பெயர்களை சொல்லி நாமினேட் செய்தனர். அதன்படி இந்த வாரம் அதிகம் பேரால் ஆயிஷா, அசீம், ராம் ஜனனி,கதிரவன் ஏடிகே ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தமக்குத் தரப்பட்ட கதாப்பாத்திரங்களாக மாறி நடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் விக்ரமனுடன் பேசிக் கொண்டிருக்கும் ஏடிகே கடுப்பாகி சில வார்த்தைகளை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!