திருமண வரவேற்பிற்கு வரும் விருந்தினர்களுக்கு மிரட்டல் கண்டிஷன்களை போட்டுள்ளார் மகாலக்ஷ்மி கணவர் ரவீந்தர்.
சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மி தயாரிப்பாளர் ரவீந்தரின் திருமணம் குறித்து பேச்சுதான் கோலிவுட் வட்டாரத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது. கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாமல் இப்படி திருமணம் செய்து கொண்டார்களே என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.
இருவரையும் ட்ரோல் செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள் சிலர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத புதுமண தம்பதிகளான ரவீந்தரும் மகாலக்ஷ்மியும் ஜாலியாக ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர்.அத்தோடு தங்களின் காதல் உண்மையானது என போட்டிபோட்டுக்கொண்டு காதல் ரசம் சொட்ட சொட்ட கேப்ஷன்களையும் கொடுத்து வருகின்றனர் மகாவும் ரவீந்தரும்.
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு புதுமண தம்பதியினர் பேட்டியளித்துள்ளனர். அப்போது பேசிய ரவீந்தர், திருமணம் எளிமையாய் முடிந்த நிலையில் விரைவில் சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுமென தெரிவித்துள்ளளார். வரவேற்பு நிகழ்ச்சியில் மகாலக்ஷ்மிக்கு விருப்பம் இல்லை இவள் சிம்பிளாக தான் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.ஆனால் நான் கொடுத்ததை எல்லாம் கலெக்சன் பண்ணவேண்டாமா..? அதற்காகக் தான் வரவேற்பை நடத்த திட்டமிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
அத்தோடு வரவேற்பிற்கு வருபவர்கள், பொக்கே, மலர்வளையம் போன்றவற்றையெல்லாம் கொண்டு வரக் கூடாது என்றும் அதிரடியாக கூறியுள்ளார். அப்படி கொண்டு வந்தால் பொக்கே கொண்டு வந்தால் 15000 ரூபாய், மலர்வளையத்திற்கு 25000 ரூபாய் ஃபைன் போடப்படும் என்றும் மிரட்டி கூறியுள்ளார் ரவீந்தர்.
10000 ரூபாய் மொய் வைத்தால் கூட சரிதான் என்றும் கூறியுள்ளார் ரவீந்தர்.கையில் எதுவும் கொண்டு வராட்டியும் மொபைல்ல பே பண்ணிறதிற்கு ஏற்ப அங்க வச்சு இருப்போம். ரவீந்தரின் இந்த கண்டிஷன்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனைக் கேட்ட நெட்டிசன்கள் ரொம்ப விவரம்தான் என கூறி வருகின்றனர். ஏற்கனவே தங்களின் வாழ்க்கைத்துணைகளை விவாகரத்து செய்த இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!