விஜய் டிவியில் பல சீரியல்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் இதில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2. திருமணத்திற்குப் பிறகும் பெண்கள் தமது கனவுகளை அடைய போராட வேண்டும் என்பதை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.
அந்த வகையில் கதாநாயகியாக சந்தியா போலிஸ் ரெயினிங் போனது போது துப்பாக்கி சூடு வாங்கி தற்பொழுது குணமடைவதற்காக வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.சந்தியாவுக்கு பலத்த அடி ஏற்பட்டதால் சிவகாமி சந்தியா போலிஸ் ஆகக் கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து தற்பொழுத வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சந்தியா போலிஸ் ரெயினிங் போவதற்காக கிளம்பும் போது சிவகாமி சந்தியா போலிஸ் ஆக வேண்டாம் என தடுத்து நிறுத்துகிறார். அத்தோடு கோடு ஒன்றை வரைந்து இதை தாண்டி போனால் இந்த குடும்பமே வேணாம் என்று போக சொல்கின்றார். இதனால் சந்தியா என்ன முடிவு எடுக்கப் போகின்றார் என அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.
Listen News!