தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன்.இவரது நடிப்பில் இறுதியாக பிரின்ஸ் என்னும் திரைப்படம் வெளியாகி கலவையாக விமர்சனங்களையே பெற்றது.
இதனை அடுத்து ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி சங்கர் நடித்து வருகின்றார். இப்படத்தின் 80 சதவீதமான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இப்படம் பிரமாண்டமாக உருவாகி வருவதாகவும் டான் மற்றும் டாக்டர் படங்களைப் போல இப்படமும் சிவகார்த்திகேயனுக்கு நல்லதொரு அடையாளத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்றும் நம்பப்படுகின்றது. இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி பற்றி கூறிய விடயம் ஒன்று ரைலாகி வருகின்றது.
அதாவது ஆர்த்தியை கல்யாணம் பண்ணினதுக்கு அப்பிறம் தான் அங்க அங்க ஷோ பண்ணிட்டு இருந்த எனக்கு என்று ஷோ வந்திச்சு.நான் ஒரு அங்கர் ஆனேன். அது அவங்க கொண்டு வந்த லக்கா என்று தெரில எனக்கு பொறுப்புகள் அதிகமாகிடுச்சு. பொதுவாக கல்யாணம் ஆகிட்டாலே அச்சச்சோ மாட்டிட்டாங்க என்று சொல்லுவாங்க.
ஆனால் அது உண்மை இல்ல கல்யாணம் பண்ணினால் பொறுப்பு வரும் லைப் ஒரு ஸ்டைலில் மாறிடும் எனக்கு அப்பிடி தான் மாறிச்சு என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!