தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகை தான் வாணி போஜன். சீரியல் மூலம் தனது கெரியரை ஆரம்பித்த இவர் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகின்றார். இந்த நிலையில் தற்பொழுது செங்கலம் என்னும் வெப் சீரியலில் நடித்திருக்கின்றார். இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
இந்த நிலையில் இது குறித்து பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது இந்த வெப் சீரியலில் நடிக்க கூப்பிடும் போது என்னாலையே நம்பவே முடில. ஆனால் ட்ரெய்லர் பார்த்த போது எனக்கே செம குஷியாக இருந்திச்சு. எனக்கு இவே போதும் என்று இருந்திச்சு.
அதே போல நான் ஆரம்பத்தில நடிக்கும் போது ஒரு படத்தில டைரக்டர் கூப்பிட்டு பேசினாரு. அப்போ நான் தமிழ்ல பேசுங்க சேர் என்று சொன்னேன். இப்போது சத்தமா பேசாதம்மா. தமிழ் பேசினால் ஹீரோயின் என்று சொல்ல மாட்டாங்க என்றாரு.
ஆனால் இந்த சீரியல்ல தமிழ் நல்லா பேச தெரிஞ்சதால தான் என்னை எடுத்தாங்க. அதை நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கு.தமிழ் தெரிஞ்சவங்களால தான் இதை பண்ண முடியும் என்று எடுத்தாங்க இது ரொம்ப பெரிய மாற்றம் என்று தான் சொல்லனும் என்று கூறியிருந்தார்.
Listen News!