பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு முழுவதும் அரண்மனையாக மாறி உள்ளது. அதில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.அதேபோல் அசீம் படைத்தளபதியாகவும், விக்ரமன் ஆலோசகராகவும், மணிகண்டா ராஜேஷ் இளவரசராகவும், ஜனனி இளவரசியாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
முதலில் இவர்கள் தமக்குத் தரப்பட்ட கெட்டப்புக்களில் இருக்கும் ப்ரோமோ வெளியாகியிருந்தது. இதனை அடுத்து தற்பொழுது வெளியாகியிருக்கும் ப்ரோமோ பார்வையாளர்களை அதிச்ியடையச் செய்துள்ளது. அதாவது விக்ரமனும் அசீமும் பேசிட்டு இருக்கும் போது சண்டையாகிவிட்டது.
அதில் அசீம் எச்சில் துப்பித் தந்தால் சாப்பிடுவீங்களா என்று பேசுகின்றார்.இதனால் கடுப்பான அசீம் அநாகரிகமாக பேசாதீங்க எனத் திட்டுகின்றார்.அத்தோடு அசீம் யாரைப் பார்த்து ஏய் என்று திட்டுகிறாய் யாராடா நீ என்று கேவலமாக திட்டியுள்ளார்.இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!