• Sep 20 2024

நிறைய பேசினால், தலைக்கு மேல ஏறிடுவாங்க அப்படியே இருக்கட்டும்- விஜய் , அஜித் பற்றி ரகசியத்தை சொன்ன பிரபல நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகராக வலம் வருபவர் நடிகர் எம்எஸ் பாஸ்கர், காமெடி நடிகராக முதலில் படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் பின்பு குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.இவர் இதற்கு முதல்  டிவி சேனல் ஒன்றில் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற காமெடி சீரியலில் நடித்துதான்  பிரபல்யமானார்.

அதுமட்டுமின்றி எம் எஸ் பாஸ்கர் ஒரு டப்பிங் கலைஞராகவும் இருக்கின்றார். சூது கவ்வும் அறை எண் 302ல் கடவுள் மொழி எட்டு தோட்டாக்கள் காற்றின் மொழி உள்ளிட்ட படங்களி்ல் மிகச்சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.இந்தத நிலையில் இவர் அண்மையில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.


அதில்  கிரீடம் படத்தில் நடிப்பதற்காக அஜித் வந்திருந்தார். அவருக்கான காட்சி இரவில்தான் எடுக்கப்படும் என்றாலும், பகல் முழுக்க எங்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். அவருக்கு முதுகு வலி இருந்ததால், உட்கார முடியாது. அதனால், அண்ணே, நீங்க உட்காருங்க என என்னையும், இன்னொரு ஆர்ட்டிஸ்ட்டையும் உட்கார வைத்துவிட்டு, அவர் மணிக்கணக்கில் நின்றபடி பேசினார். 9 மணி நேரம் எங்ககிட்ட நின்னுகிட்டே பேசினார். அவ்வளவு தன்மையான மனிதர்.


நடிகர் விஜய், பேச மாட்டார் என்கின்றனர். என்ன பேச வேண்டும் என கேட்கிறேன். என்னை போன்றவர்களை பார்த்தால், வாங்க அண்ணா நல்லா இருக்கறீங்களா சாப்பிட்டீங்களா என விசாரிக்கிறார். உட்கார வைத்து பேசுகிறார். மற்றபடி அவர் வேலையில் அவர் சரியாக இருக்கிறார். நிறைய பேசினால், தலை மேல ஏறிக்கொள்வார்கள். இது பொதுவான விஷயம்தான். அதனால்தான் அவர் யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை. பேசினால், அடுத்த படத்தில் எனக்கு ஒரு கேரக்டர் வாங்கி கொடுங்க என்பார்கள். உடனே அதற்கு சரி என்று பொய் சொல்ல வேண்டும். இதையெல்லாம் தவிர்க்க தான் விஜய் போன்றவர்கள், யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை, என்று கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement