தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அதிக அளவிலான ரசிகர் பட்டாளம் கொண்ட முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ஹிந்தியில் வெளிவந்த காஷ்மீர் பைல்ஸ் படம் குறித்து துணிச்சலாகப் பேசியிருந்தார்.
அதாவது "காஸ்மீர் பைல்ஸ் படத்தில் ஹிந்து பண்டிதர்கள் கொல்லப்படுவது போல காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் இஸ்லாமியர் ஒரு மாட்டைக் கொண்டு சென்ற போது ஒருசிலர் அவரை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும்படி துன்புறுத்தினார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது" என்று துணிச்சலுடன் பேசியுள்ளார் நடிகை சாய் பல்லவி.
இதற்குப் பலர் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியிருந்தாலும் சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வருகின்றார்கள்.இந்நிலையில் பிரபல நடிகையும் எம்பியுமான விஜயசாந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் நடிகை சாய் பல்லவியை கண்டிக்கும் வகையில் பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.
அதில் "பசுக்கள் கொல்லப்படுவதை கேள்வி எழுப்புவதும், காஷ்மீரில் பண்டிதர்கள் கொல்லப்படுவதும் ஒன்றல்ல. நீ கொஞ்சம் சிந்தித்தால் உண்மை புரியும். ஒரு தாய் தன் மகனை தவறு செய்ததற்காக அடிப்பதும் , ஒரு திருடனை திருடியதற்காக அடிப்பதும் ஒன்றா?, இப்பிரச்சனை பற்றி தெரியாவிட்டால் நீ பேசாமல் இருப்பதே சிறந்தது" என்று கோபத்துடன் கண்டித்துள்ளார் நடிகை விஜயசாந்தி.
பிற செய்திகள்
- விக்ரம் படம் இதனால் தான் வெற்றி பெற்றது- உண்மையை வெளிப்படையாகக் கூறிய கமல்ஹாசன்
- தூக்கமில்லாமல் தவித்த நடிகை சமந்தா-இது தான் காரணம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!