• Sep 21 2024

இளையராஜாவால் கடுப்பான வைரமுத்து- இருவருக்கும் இடையில் இப்படியொரு பிரச்சினையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் இருந்து பிரபல்யமான இசையமைப்பாளராக வலம் வருபவர் தான்  இசைஞானி இளையராஜா. இவர் இறுதியாக சூரி நடிப்பில் வெளியாகிய விடுதலை திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.அவர் இசைக்காக அவர் வீட்டின் வாசலில் காத்திருந்த இயக்குநர்கள் ஏராளம் எனலாம்.

இளையராஜா எதுவென்றாலும் முகத்துக்கு நேராகப் பேசக்கூடியவர்.இந்த நிலையில் இளையராஜா யார் யாருடன் பிரச்சனையில் இருந்தார் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.பாலச்சந்தர் இளையராஜா இவர்கள் கூட்டணியில் வெளிவந்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றியடைந்த படங்களாகவே அமைந்தன.


இருவரும் கிட்டத்தட்ட இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.அதே சமயம் பாலச்சந்தர் தயாரிப்பில் மொத்தம் 14 படங்களுக்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த நிலையில் ஒரு படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவிடம் பாலச்சந்தர் கேட்டிருந்தாராம் .ஆனால் அந்த நேரத்தில் இளையராஜா மிகவும் பிசியாக இருந்ததனால் என்னால் இப்போது முடியாது, என் படங்களை எல்லாம் முடித்துக் கொண்டு பிறகு தருகிறேன் என்று சொன்னாராம் .

இதனால் கோபம் கொண்ட பாலச்சந்தர் வேறொரு இசையமைப்பாளரை வைத்து அந்த படத்திற்கான பின்னணி இசையை முடித்து படத்தை வெளியிட்டாராம் .இதுதான் இளையராஜாவிற்கும் பாலச்சந்தருக்கும் ஏற்பட்ட முதல் மோதலாம்.


 எண்ணற்ற பாடல்களை வழங்கிய இளையராஜா எஸ் பி பி ஆகிய இருவருக்கும் அப்படி என்னதான் பிரச்சனை என்று பார்த்தால் இளையராஜா எஸ்பிபிக்கு எதிராக ஒரு சட்டபூர்வமான நோட்டீசை அனுப்பி இருந்தார். அந்த நோட்டீசில் இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதி இன்றி இசையமைத்தாலோ பாடினாலோ காப்புரிமை மீறல் என்ற வழக்கின் கீழ் அவர் ஒரு பெரும் தொகையை செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீசில் பாலசுப்பிரமணியனுக்கு எதிராக இளையராஜா கொடுத்திருந்தார்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக வைரமுத்துவும் இளையராஜாவும் ஒரு அசைக்க முடியாத கூட்டணியாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். இவருடைய இசையும் வைரமுத்துவின் மொழியும் ஒன்றாக இணைந்து சினிமாவை ஒரு ஆகச் சிறந்த படைப்பாக கொண்டு சென்றது. இப்படி சுமூகமாக போய்க்கொண்டிருந்த இவர்கள் நட்பில் இளையராஜாவின் சில செய்கைகள் தான் வைரமுத்துவை கடுப்பேத்தி இருக்கிறது.

 அதாவது வைரமுத்து பாடல் வரிகளை கொடுத்தாலும் அதில் இளையராஜா தலையிட்டு மாற்றம் சொல்வாராம். அதுதான் அவர்களுக்குள்ள விரிசலை அதிகப்படுத்தி இருக்கிறது. உதாரணமாக இசைப்பாடும் தென்றல் என்ற படத்திற்காக ஒரு பாடல் வரியை வைரமுத்து எழுதி கொடுக்க இளையராஜா அது பிடிக்கவில்லை என்று அவரே எழுதி காட்டினாராம். இதனால் வைரமுத்து மிகவும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இப்படி சிறு சிறு பிரச்சனைகள் அவர்களுக்குள் எழவே கடைசிவரை இருவரும் பேசிக் கொள்ளவே இல்லையாம்.


Advertisement

Advertisement