தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் இலியானா. அதுமட்டுமல்லாது இவர் தமிழில் 'நண்பன்' என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து உள்ளார். அந்த படத்தில் இடம் பெற்ற இருக்கானா இடுப்பிருக்கானா என்ற பாட்டுக்கு இடுப்பை ஆட்டி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.
இலியானா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருபவர். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஏப்ரல் நேற்றைய தினம் இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்தவகையில் குழந்தையின் உடை மற்றும் அம்மா என்கிற டாலரை புகைப்படம் எடுத்து வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இதனையடுத்து இலியானாவுக்கு திருமணமாகவில்லை என்பதால் அந்த குழந்தையின் தந்தை யார் என்று கேட்டு சமூக வலைதளவாசிகள் அவரை மிகவும் மோசமாக பேசி வருகிறார்கள். இதனால் இலியானாவின் ரசிகர்கள் கோபம் அடைந்து மோசமாக பேசுவர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதாவது "குழந்தையின் தந்தை யார் என்று கேட்க யாருக்கும் உரிமை இல்லை. இலியானாவை நிம்மதியாக இருக்க விடுங்கள். குழந்தை நல்லபடியாக பிறக்க பிரார்த்தனை செய்யுங்கள். ஒரு ஆண் திருமணமாகாமல் குழந்தைக்கு அப்பாவானால் வாழ்த்தும் சமூகம் பெண்ணை மட்டும் ஏன் இப்படி குறை சொல்கிறது.
அந்த வரிசையில் கரண் ஜோஹர், துஷார் கபூர் ஆகியோர் தந்தையான போது யாரும் குழந்தையின் அம்மா பற்றி கேட்வில்லையே என தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது இலியானா பொதுவாக தன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சமூக வலைதளத்தில் பேசும் ஆள் இல்லை. அப்படி இருக்கும்போது தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்ததே பெரும் வியப்பாக இருக்கிறது.
இவ்வாறு ஒரு தாய் சந்தோஷத்தில் செய்த காரியத்தை பார்த்து அவரை வாழ்த்த மனமில்லாவிட்டாலும் அவரை பற்றி மோசமாக பேச வேண்டாம். கர்ப்ப காலத்தில் இலியானாவின் மனம் நோகாமல் இருந்தால் போதும் என ரசிகர்கள் இலியானாவை கேவலமாகப் பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Listen News!