தமிழ் சினிமாவில் அதிகளவில் சிம்பு படங்களில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகர் கூல் சுரேஷ். தற்பொழுது படவாய்ப்புக்கள் குறைந்ததால் சினிமா ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் ரைமிங்காக பேசி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார்.
குறிப்பாக சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களுக்கு, கூல் சுரேஷின் ரைமிங் வசனங்கள் பப்ளிசிட்டியாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது இவர் பிக்பாஸ்-7 போட்டியாளர்களில் ஒருவராகவும் களமிறங்கி இருக்கின்றார்.
களமிறங்கியது மட்டுமில்லாமல் தனது அலப்பறையையும் ஆரம்பித்து விட்டார். அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் தன்னை எதற்காக முதல் போட்டியாளராக அனுப்பி வைத்தார்கள் என்பது குறித்து கூல் சுரேஷ் சக போட்டியாளர்களிடம் கூறியுள்ளார்.
அதாவது "எல்லாருமே கலாய்ப்பீங்க என்று தெரியும், அதனால தான் எல்லாரும் வர்றதற்கு முன்னாடி பர்ஸ்ட் டயலாக் ஒன்று சொன்னோம்" என்கிறார். அதற்கு சக போட்டியாளர்கள் என்ன டயலாக் என ஆர்வமுடன் கேட்கின்றனர்.
அதற்கு கூல் சுரேஷ் "வீடியோவில் என்னைப் பார்த்ததும் கமெண்டில் போடுவீங்க "மகாபிரபு நீங்க இங்கயும் வந்திட்டீங்களா" அப்பிடின்னு மீம்ஸ் இல் வரும், நான் தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன், இரும்பிலும் இருப்பேன், கடிக்கிற கரும்பிலும் இருப்பேன்" என்கிறார்.
பதிலுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சரவண விக்ரம் "அடுத்தவார நாமினேஷனிலும் இருப்பேன்" எனக் கூறி கூல் சுரேஷைக் கலாய்க்கின்றார். இதோ அந்த சூப்பரான வீடியோ..!
Listen News!