• Sep 21 2024

மனைவியைப் பிரிந்தால் என்ன மகளுக்காக இதையும் செய்திட்டு தான் வருகிறேன்- மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவரும் விதமாக திரைப்படங்களை எடுக்கக் கூடிய பல இயக்குநர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் இயக்குநர் மிஷ்கின். வின்சென்ட் செல்வாவிடம் முதலில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

பின்பு சித்திரம் பேசுதடி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். அடுத்து அவரது இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் அண்மையில் இவர் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். திருமணத்திற்கு பின் எனக்கு அழகான மகள் பிறந்தநாள். மகள் பிறந்த சில நாட்களிலேயே மனைவியை பிரிந்துவிட்டேன், எங்களது பிரிவிற்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம்.

என் மனைவி, மகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார். எனது மகளுக்காக நான் நடிக்கும் படங்கள் மூலம் கிடைக்கும் பணத்தை தனியாக சேமித்து வைத்திருக்கிறேன், எனது மகளின் திருமணத்திற்கு அதை செலவு செய்வேன் என தனது குடும்பம் குறித்து முதன்முறையாக பேசியுள்ளார்.

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement