• Sep 20 2024

என்னுடைய 23 வயதிலேயே இதை செய்து முடித்து விட்டேன் - பரபரப்பாக பேசிய நடிகை கங்கனா ரனாவத்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் நடிப்பில் இறுதியாக தலைவி என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது லாக் அப் என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிட்டு வருவார். மேலும் இவருடன் அர்ஜுன் ராம்பல் உள்ளிட்டோர் நடித்திருக்கும் “தாக்கத்“ படம் மே 20ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் “தாக்கத்” படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார் கங்கனா. அப்போது அவர் கூறியதாவது மக்கள் இலக்கியம் மற்றும் பிற விஷயங்கள் பற்றி பேசியபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதையடுத்தே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

அதில் இருந்து நிறைய புத்தகங்கள் வாசிக்கிறேன். நான் நடிக்க வந்தபோதே திரைக்கதை எழுதுவது எப்படி என்று கற்றுக் கொண்டேன்.எனக்கு புது விஷயங்களை கற்றுக்கொள்ள பிடிக்கும். தற்போது கூட யாருடனாவது பேசினால் அவர்களிடம் இருந்து எதையாவது கற்க விரும்புவேன்.

திரைக்கதை எழுதுவது குறித்து முறைப்படி படித்தேன். 23-24 வயது இருந்தபோதே சர்வதேச குழுவுடன் சேர்ந்து கலிபோர்னியாவில் குறும்படத்தை இயக்கினேன். புது விஷயங்களை கற்பதில் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். மேலும் புது விஷயங்களை படிப்பதிலும் ஆர்வம் என்று கூறியுள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement