எத்தனை வருடங்கள் ஆனாலும் ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே நமது மனதில் பதிந்திருக்கும். அப்படி சூரியா நடித்த ஆறு திரைப்படத்தில் இடம் பெற்ற சவுண்ட் சரோஜா கதாபாத்திரம் என்றும் மறக்காத ஒன்று அதிலும் அவர் பேசும் ஒரு வார்த்தை வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.
80 மற்றும் 90 களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென் இந்திய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்த ஐஸ்வர்யா பாஸ்கரன் அவர்கள் சில மசாலா பாடல்களிலும் தோற்றமளித்தது உண்டு.மேலும் இந்திய சினிமாவில் நல்ல மார்க்கெட்டை வைத்திருந்த ஐஸ்வர்யா பாஸ்கரன் அவர்களுக்கு திருமணத்திற்கு பின்னர் பட வாய்ப்புகள் சரிந்தது.
அதன் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா தற்பொழுதும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கு தன்வீர் என்பவருடன் 1994-ம் ஆண்டு திருமணமாகி 1996-ம் ஆண்டு விவாகரத்து ஆன நிலையில் 1995-யில் பிறந்த தனது 25 வயது மகளை இவர் தான் வளர்த்து வந்து அவருக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார்.. இவர் கடைசியாக தமிழில் தோன்றிய திரைப்படம் 2018-ம் ஆண்டு வெளியான “சாமி 2” திரைப்படம் தான்.
திரைப்படங்களிலும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத ஐஸ்வர்யா பாஸ்கரன் அவர்கள் தற்பொழுது சமையல் யூடூயூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் அவருக்கு தெரிந்த சமையல் குறிப்புகளை பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில் இவர் பிரத்தியோக ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
அதாவது பயில்வான் பற்றி கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் சரி என்று சொல்ல வரவில்லை பத்திரிகையாளர் என்ற வகையில் அவர் பேசுகின்றார்.இந்த துறைக்கு வந்தால் எதையும் தாங்கி கொள்ள தான் வேண்டும் என கூறினார்.
அத்தோடு இப்ப நான் படவாய்ப்ர்கள் இல்லாமல் இருக்கின்றேன் யாராச்சும் எனக்கு படவாய்ப்புக்கள் தாங்கள்.நான் தற்பொழுது வீடு வீடாய் சென்று சோப்பு விற்று தான் என் வாழ்க்கையை நடத்துகின்றேன்.இதற்கு ஒரு போதும் நான் மனம் வருந்த வில்லை. இது ஒரு புதிய அனுபவமாக உள்ளது.என்னுடைய வேலையை நான் சரி வர செய்கின்றேன் எனக் கூறியுள்ளார்.அத்தோடு நான்ஒரு வேளை தான் சாப்பிடுகின்றேன்.
என் கணவரை பிரிந்ததிற்கு நான் ஒரு போதும் வருந்தவில்லை. என் பெண்ணை நன்றாக வளர்த்து அவளுக்கு திருமணமும் செய்து விட்டேன்.அத்தோடு உங்கள் கம்பெனியில் கக்கூஷ் கழுவிற வேலை என்றாலும் அதையும் சந்தோஷமாக கழுவிட்டு போவேன்..அதிலை ஒன்றும் தப்பில்லை தானே..எனவும் கூறியுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் எங்கள் சவுண்டு சரோஜாவிற்கு இப்படியொரு நிலையா ..?என புலம்பி தவித்து வருகிறார்கள்.
பிற செய்திகள்
- குட்டை சோட்சில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த பவித்ரா..!
- வைரல் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி நடுவர்.. அதுவும் யாருடன் தெரியுமா-இதோ வீடியோ..!
- பாட்டி ஆக போற வயசுல இதுவா -நயன்தாராவை விமர்சித்த மருத்துவர்-பதிலடி கொடுத்த சின்மயி
- விவசாயம் பார்க்கும் நடிகர் நெப்போலியன்- வைரலாகும் வீடியோ..!
- சினிமாவில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா? – விக்னேஷ் சிவனே கூறிய தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!