நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பத்து தல. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
பத்து தல திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் காட்சியான அதிகாலை 4 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பத்து தல படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வெளியான போது பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. அதனை தடுக்கும் விதமாக திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இப்படம் குறித்து சிம்பு பேட்டியளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது பத்து தல திரைப்படத்திற்கு பெரியதொரு ஓபினிங் இருக்கு என்று சொல்லுறாங்க. இதற்கு நான் காரணம் கிடையாது. என்னோட முதல் படங்கள் வெற்றி பெற்றதால் இப்படத்திற்கு வரவேற்புக் கிடைச்சிருக்கு என்று சொல்ல முடியாது.
மக்களின் ஆதரவு இல்லாமல் இப்படம் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது எல்லோரும் தியேட்டருக்கு வந்த இந்தப் படத்தை பாருங்க. இந்த படத்தில் எல்லோருமே இப்படத்தில் சூப்பராக பணியாற்றி இருக்கிறாங்க. எல்லோருக்கும் நன்றி என்றும் அதில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!