சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.மகாலட்சுமிக்கு முன்பே அனில் என்பவருடன் திருமணமாகி, சச்சின் என்ற மகன் இருக்கிறான். பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்தனர்.
ரவீந்திரனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அதன்படி இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.திருமணத்துக்குப் பிறகு தங்களின் ஒவ்வொரு அசைவையும் இன்ஸ்டகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மகாலட்சுமி ரவீந்தர் தம்பதி.
இந்த நிலையில் நேற்றைய தினம் மகாலட்சுமி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். அவருக்கு மல்லிப்பூவைக் கொடுத்து இது தான் விலையுயர்ந்த பரிசு என்றும் தெரிவித்திருந்தார். அதற்கு மகாலட்சுமி என்னிடம் எல்லாம் இருக்கிறது அம்மு... உனக்கு தெரியுமா, இந்த பூ எனக்கு மிகவும் விலையுயர்ந்த ஒன்று, ஏனென்றால் உங்களால் யாருக்கும் எதையும் பரிசளிக்க முடியும்.
ஆனால் கணவன் மட்டுமே தன் மனைவிக்கு பூவை பரிசளிக்க முடியும்... நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.. எல்லாவற்றிற்கும் மேலாக, நீ இறைவன் கொடுத்த பரிசு எனக்கு…. லவ் யூ மை அம்மு” எனத் தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் ரவீந்தர் அதிகளவான உணவுகளை வைத்துக் கொண்டு நான் டயட்டில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இது டயட்டா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!