• Sep 20 2024

உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும்- குக்வித் கோமாளி சுனிதா போட்ட பதிவால் குழப்பத்தில் இருக்கும் போஃலோவர்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 3 வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அதுவும் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் வெற்றியே இதன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள்தான்.குறிப்பாக கோமாளிகள் செய்யும் சேட்டைகள் மற்றும் அவர்களது வித்தியாசமான கெட்டப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

இந்த நிகழ்ச்சியின் கோமாளியாக வந்து அனைவரையும் கவர்ந்து வரபுவர் தான் சுனிதா.இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.அசாமை சேர்ந்த சுனிதா விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம்தான் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து சிங்கிள் பொண்ணுங்க, காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளிலும் இவர் சிறப்பாக பங்கேற்றுள்ளார். சில சீரியல்களிலும் நடித்துள்ள இவர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக நடித்திருந்தார். ராகவா லாரன்சின் காஞ்சனா 3 படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இவருக்கு சரியாக தமிழ் பேச வராது என்றாலும் இவர் கொஞ்சி கொஞ்சி பேசும் அழகை ரசிகர்கள் அதிகமாக ரசித்து வருகின்றனர். தனியாக யூடியூப் சேனலையும் நடத்திவரும் இவர் தன்னுடைய வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் பகிர்வுகளை அதிகமாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் ஒரு புதிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஒருவரை மன்னிக்க வேண்டும் என்றால் உடனடியாக மன்னித்து விடுங்கள். அது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ நமக்கு நல்லது என்று கூறியுள்ளார். எந்த பிரச்சினையையும் மனதில் வைத்திருந்தால் கெடுதல் நமக்குதான் என்றும் நாம் நிம்மதியாக இருந்தால் போதும் என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் எதற்காக இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அவருக்கு குக் வித் கோமாளி செட்டில் யாருடனாவது பிரச்சினை ஏற்பட்டதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement