பிக்பாஸ் நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து பலர் வெளியேறிய நிலையிலும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.இந்நிலையில் 83வது நாளில் நடந்தது என்ன என்பதை பார்ப்போம்...
கமல் வந்து போன வார டாஸ்க் பற்றி பேசிட்டு இருந்தார்.அப்புறம் வீட்டில் இருக்கிறவங்களுக்கு ஒரு கார்ட் கொடுக்கப்பட்டு இருந்தது.அந்த கார்ட் யார் யாருக்கு என்னென்ன கொடுத்து இருந்தீங்க எனக் கேட்டார்.அப்பிடியிருக்கும் போது மற்றவங்க கேமை பறிச்சு விளையாடுறீங்க என அமுதவாணனுக்கு அசீம் கொடுத்து இருந்தார்.
அப்போது, எழுந்து பேசும் அசீம்,"ஜனனியோட வாய்ப்பை பல வகையில பறிச்சிட்டாரு என்பதற்காக இந்த கார்டை அமுதவாணனுக்கு கொடுக்குறேன்" என அசீம் சொல்லிவிட்டு அமுதுவிடம் கார்டு ஒன்றை கொடுக்கிறார். பின்னர், இதுகுறித்து அசீம் மற்றும் அமுதவாணன் கிச்சன் பகுதியில் வாக்குவாதம் செய்கின்றனர்.
அப்போது, அமுதவாணன், "அது 100 சதவீதம் பொய் அசீம்" என்கிறார். இதனை கேட்ட அசீம், ஜனனிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்கிறார். தொடர்ந்து இதனை அமுதவாணன் மறுத்ததுடன் "இந்த கார்டு உனக்கு சேரவேண்டியது அசீம்" என்கிறார்.
அப்போது அசீம் "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்" என்கிறார். இதனை கேட்டு அமுதவாணன் "சூப்பர்" என சொல்லிவிட்டு திரும்பி நடந்து செல்கிறார். அப்போது அசீம்,"ஜனனி இந்த வீட்டை விட்டு போக காரணம் நீங்க தான். அவங்களை பயன்படுத்திகிட்டு நீங்க safe ஆகிட்டீங்க, அந்த பொண்ணை வெளியே அனுப்பிட்டீங்க" என்று கூறினார்.
அப்புறம் ஒரு டாஸ்க் கமல் கொடுக்கின்றார்.அதாவது யாருடைய கார்ட் எடுக்கிறீங்களோ நீங்க அவங்களாக மாறி பேசனும்.அவ்வாறு ஷிவினுக்கு அசீம் கார்ட் வந்து இருந்தது.
அசீமே மிரண்டு போன மாதிரி ஷிவின் செய்து காட்டினார்.அதன் பிறகு ஏ.டி.கே கதிரவன் போலவும் விக்ரமன்..ஏ.டி.கே மாதிரி பேசினார்.அதன் பிறகு அசீம் ரச்சிதா மாதிரி பேசினார்.அதன் பிறகு மைனாநந்தினி மாதிரி பேசினார்.இவ்வாறாக மாறி மாறி பேசிக்கொண்டார்கள்.
அதன் பிறகு அமுதவாணன் கதிரவன் ஷிவின் மூவரும் சேவ் ஆகியுள்ளனர்.இந்த வாரம் மணிகன்டன் தான் எவிக்ட் ஆகியுள்ளார் என நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.இவ்வாறுஇருக்கையில் இதன் முழுத்தகவல் அறிய கீழுள்ள காணொளியை கிளிக் செய்யவும்...
Listen News!