• Sep 20 2024

ப்ரமோஷன் என்ற பெயரில் பிரபல நடிகையுடன் ஊர் சுற்றுகின்றார்- உதயநிதியை வறுத்தெடுத்த பிரபல நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் மாமன்னன்.இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் மாரி செல்வராஜையும் கமலையும் உதயநிதியையும் ஒரு பேட்டியில் வறுத்து எடுத்திருக்கிறார். அதாவது தன் வலியை தன்னோடு வைத்திருக்க வேண்டுமே தவிர அதை வெளிப்படையாக அதுவும் ஒரு மேடையில் இந்த அளவுக்கு மாரி செல்வராஜ் பேசியிருக்கக் கூடாது என்று மீசை ராஜேந்திரன் கூறினார்.


 மேலும் அவர் நினைக்கிற மாதிரி தமிழ் சினிமாவிலோ அல்லது நிஜத்திலயோ தாழ்த்தப்பட்டோர் உயர்த்தப்பட்டோர் என்ற ஒரு பிரிவினை இப்போது இல்லை என்றும் கூறினார்.ஆனால் எப்பவோ இருந்ததை இன்னமும் தூக்கி பிடித்துக் கொண்டு வருகிறார் மாரி செல்வராஜ் என்று மீசை ராஜேந்திரன் கூறினார். இந்த சமயத்தில் பேசும் மாரி செல்வராஜ் கர்ணன் படம் வந்த சமயத்தில் இதைப் பற்றி பேசியிருக்கலாமே. ஏன் பேசவில்லை .ஏனெனில் அந்த நேரத்தில் உள்ள ஆட்சி வேறு .இப்பொழுது நடக்கும் ஆட்சி வேறு. இப்பொழுது என்ன பேசினாலும் தன்னை யாரும் ஒன்று செய்ய முடியாது என்ற ஒரு கர்வத்தில் இருக்கிறார் மாரி செல்வராஜ் என்றும் மீசை ராஜேந்திரன் கூறினார்.


மேலும் கமலை பற்றி கூறிய மீசை ராஜேந்திரன் மேடையில் அண்ணன் வடிவேலு என்று சொல்வதா தம்பி வடிவேலு என்று சொல்வதா என்று கேட்டிருந்தார். கமல் எவ்வளவு பெரிய நடிகர். எவ்வளவு பெரிய ஒரு கலைஞன். அவர் போய் இப்படி சொல்லலாமா. இதுவும் வடிவேலுவை ஒரு பெரிய ஹைப்பில் தூக்கி விடுவதற்கான ஒரு முயற்சி தான் என்றும் மீசை ராஜேந்திரன் கூறினார்.


மேலும் உதயநிதி இப்பொழுது ஒரு அமைச்சர். மக்களுக்கான பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றது. ஒரு அமைச்சராக உதயநிதி பார்க்கும் வேலை இதுதானா? ப்ரோமோஷன் என்ற பெயரில் தினமும் இந்த பக்கம் நடிகை கீர்த்தி சுரேஷ், அந்தப் பக்கம் ஏ ஆர் ரகுமான் என நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு பக்கம் மக்களுக்கான பிரச்சினைகள் நிறைய கிடைக்கின்றன என்றும் மீசை ராஜேந்திரன் கூறினார்.

Advertisement

Advertisement