• Sep 20 2024

24 மணி நேரத்தில் அவ யாரென்னு கண்டுபிடிச்சு, அவளுக்கு நாம யாரென்னு காட்டலாம்; பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் 'பாரதி கண்ணம்மா'. இந்த சீரியலானது எப்போதுமே விறுவிறுப்பிற்கும் பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இதன் முதல் பாகம் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஆரம்பமாகி எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.


அந்தவகையில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா மற்றும் மது என இருவரும் வெளியே சென்றிருந்தார்கள். அப்போது மது மீண்டும் ஒரு ஆற்றங்கரை அருகே கண்ணம்மாவை அழைத்துச் சென்று இங்கு ஒரு மறக்க முடியாத விஷயம் நடந்தது அது என்ன என கேட்க, கண்ணம்மாவோ திரு திருவென முழிக்க, பிறகு மது கொடுத்த குழுவை வைத்து "நீச்சல் தெரியாமல்..." என எதையோ சொல்ல வர பிறகு மது "கரெக்டா சொல்லிட்ட நான் நீச்சல் தெரியாம அடிச்சிட்டு போனப்ப என்ன நீ தான் காப்பாத்துன" என சொல்கிறார்.

அதுமட்டுமல்லாது "எல்லா விஷயமும் அப்படியே ஞாபகத்துல வச்சிக்கிட்டு இருக்காய், நீதான் என் கண்ணம்மா நான் வச்ச டெஸ்ட்ல நூற்றுக்கு நூறு எடுத்து நீ பாஸ் பண்ணிட்ட என கண்ணம்மாவை மது கட்டிக் கொள்கிறார். அதன் பிறகு மது கண்ணம்மாவை ஒரு மெடிக்கல் ஷாப்பில் விட்டுவிட்டு பக்கத்து தெருவில் ஜாக்கெட் வாங்கி வருகிறேன் என சொல்கிறார்.


இதற்கிடையில் பலத்த மழை வந்துவிட அங்கு வரும் பாரதி பஸ் ஸ்டாப்பில் மழைக்கு ஒதுங்கி சிகரெட் பிடித்துக் கொண்டிருக்க அங்கு பொதுமக்கள் நிறைய பேர் கூடிவிட அங்கு வரும் கண்ணம்மா பப்ளிக் பிளேஸ்ல இப்படி சிகரெட் பிடிக்கிறீர்களே தப்புன்னு தோணலையா என பாரதியிடம் கோபப்பட்டு தாறுமாறாக சண்டையிடுகிறார்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் எல்லை மீறிய வாக்குவாதம் ஏற்பட கண்ணம்மா பாரதியிடம் இருந்து சிகரெட்டை புடிங்கி போட திரும்பவும் பாரதி சிகரெட்டை எடுக்கின்றார். அதன் பின்னர் அந்த சிகரெட் பாக்ஸ் மொத்தத்தையும் பிடுங்கி வெளியே வீசுகின்றார் கண்ணம்மா. உடனே பாரதி கண்ணம்மாவை அடிக்க கை ஓங்க அங்கிருந்த பெண்மணி ஒருவர் தப்பு நீ பண்ணிட்டு அந்த பொண்ணை அடிக்க வரியே பா என கேட்க பாரதி அவமானப்பட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறுகிறார்.


அதன் பிறகு மதுவிடம் கண்ணம்மா நடந்த விஷயத்தை சொல்லி பணக்காரனா இருந்தா என்ன வேணாலும் பண்ணலாமா என கோபப்பட்டு பேச, மது பாரதியும் பணக்காரன் தான் ஆனா அவன் இப்படி கிடையாது என பாரதியை பலவாறாக பாராட்டி பேசுகிறார்.

இதனைத் தொடர்ந்து பாரதி விஜய்யுடன் சரக்கு அடித்துக் கொண்டிருக்கும் போது பேசுகையில் "அந்த பொண்ண சும்மா விடக்கூடாது என்னை அவ்வளவு பேர் முன்னாடி வெச்சி அசிங்கப்படுத்திட்டா என பகூறுகின்றார். அதற்கு விஜய் 24 மணி நேரத்தில் அவ யாருன்னு கண்டுபிடிச்சு நம்ம யாருன்னு அவளுக்கு காட்டலாம் என உசுப்பேத்தும் வகையில் பாரதியிடம் சொல்கிறார். இவ்வாறாக இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட் முடிவடைகின்றது. இதற்கு பின்னர் என்ன நடக்கப் போகுது என்பதனை பொறுத்திருந்து அடுத்த எபிசோட்டில் பார்ப்போம்.

Advertisement

Advertisement